மிரள வைக்கும் மாரடைப்பு - 7 ஆம் வகுப்பு மாணவி பலி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்மகளூருவில் தாரதஹள்ளி ஆரம்பப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தவர் ஹத்தாத். இவர் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மாணவியை மீட்டு தாரதஹள்ளி ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் இல்லாததனால், சிறுமியை மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மாணவி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையறிந்த மாணவியின் குடும்பத்தினர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இருந்திருந்தால், மாணவியின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று கண்ணீர் விட்டுக் கதறினர். 7-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student died due to heart attack in karnataga


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->