ஞானவாபி மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
SC refused interm stay on gyanvabi masque case
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் ‘இந்துக்கள்’ வழிபாடு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தது. உத்தரவு பிறப்பித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே அங்கு பூஜை நடத்தப்பட்டுவிட்டதாக காசி விஸ்வநாதா் கோயில் அறக்கட்டளை தலைவா் அறிவித்தார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரபிரதேச காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகிள் உள்ள ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்து அமைப்புகள் பூஜை செய்ய இடை கால தடைவிதிக்க மறுத்ததோடு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
SC refused interm stay on gyanvabi masque case