சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை மறுநாள் திறப்பு.. ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


சபரிமலை ஐயப்பன் கோயிலில் வைகாசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் நடை திறக்கப்படுகிறது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் மண்டல பூஜைக்காக கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும்.

இந்த நிலையில் வைகாசி மாத மண்டல பூஜை வரும் மே 15ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இதற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுநாள் (மே 14ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

இந்த 5 நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இந்த பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு கேரளா அரசு போக்குவரத்து சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabarimalai ayyappan temple open on May 14


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->