கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறறை.!
Red Alert in kerala 11 district holiday
கேரளாவில் கனமழையின் காரணமாக 11 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்கிறது. இதனால், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் கனமழையின் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி,எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர் , வயநாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Red Alert in kerala 11 district holiday