இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள் கம்போடியா செல்கிறார் ராஜ்நாத் சிங்.!
Rajnath Singh is going to Cambodia the day after tomorrow
இரண்டு நாள் பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை மறுநாள் கம்போடியா செல்கிறார்.
ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9வது வருடாந்திர கூட்டம் கம்போடியாவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, கம்போடியா துணைப் பிரதமரும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான சாம்டெக் பிச்சே சேனா டிபான் அழைப்பு விடுத்தனர்.
இந்த அழைப்பின் பேரில், 2 நாள் பயணமாக நாளை மறுநாள் பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் கம்போடியா செல்கிறார். இதையடுத்து 23-ந் தேதி ஆசியான் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து கம்போடியா பிரதமரையும் சந்திக்கிறார்.
மேலும் ஆசியான் நாடுகளின் கூட்டம் மற்றும் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் தவிர, பாதுகாப்பு அமைச்சர்களுடன் இருதரப்பு விவாதங்களையும் அவர் நடத்துகிறார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து ராஜ்நாத் சிங் விவாதிக்க உள்ளார் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rajnath Singh is going to Cambodia the day after tomorrow