12 வயது வேலைக்கார சிறுவனை, ஹோமோவிற்கு பலியாக்கிய ஓனர்.! உடைந்தையான மனைவி.!  - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்ப்பூர் பகுதியில் சாஸ்திரி நகரில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இந்த வீட்டில் 12 வயது சிறுவன் ஒருவன் குழந்தை தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளான். சிறுவனை தம்பதிகள் இருவரும் சேர்ந்து அடிக்கடி அடித்து தாக்குதல் நடத்தி துன்புறுத்தி வந்துள்ளனர்.

இத்தகைய நிலையில் சம்பவ தினத்தில் சிறுவனை அந்த கணவன் அழைத்து தனது மனைவியின் கண் முன்பே பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்m இதற்கு மனைவி எந்தவிதமான கண்டனம் தெரிவிக்கவில்லை. கணவனின் இந்த மோசமான செயலுக்கு அவர் ஆதரவாக இருந்துள்ளார். 

இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் அழுதுகொண்டே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கணவர் தற்போது தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. 

அத்துடன் குழந்தை தொழிலாளர் சட்டம் மற்றும் போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajasthan jaipur boy raped


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->