ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி: வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அசோக் கெலாட் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். 

பின்னர் எனக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு யாரையும் என்னால் சந்திக்க முடியாது. 

பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு அனைவரும் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அசோக் கெலாட் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan EX CM admitted hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->