"கேம் விளையாடலாம் பாப்பா." 8 வயது சிறுமியை அழைத்து சென்று கற்பழித்து.. துண்டு துண்டாக வெட்டி இளைஞர் கொடூரம்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் உதய்பூர் பகுதியில் ஒரு இளைஞர் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் எட்டு வயது சிறுமியை கடந்த மார்ச் 29ஆம் தேதி கேம் விளையாடலாம் என்று கூறி வீட்டிற்குள் அழைத்துள்ளார்.

நம்பி வீட்டிற்கு வந்த அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் அந்த சிறுமியின் உடலை அப்புறப்படுத்த உடலை துண்டு துண்டாக வெட்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு எடுத்துச் சென்று வீசிவிட்டு வந்துள்ளார். 

மகளைப் காணாத பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் உடல் பாகங்கள் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறை பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அக்கம்பக்கத்தினரை கடுமையாக கிடக்க கூடிய விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் தான் செய்த தவறுகளை போலீசிடம் ஒப்பு கொண்டுள்ளார் இதை அடுத்து போலீசார் அந்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan 8 years Girl Raped and Killed By neighbour


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->