ரகசிய தகவலால் போதைப்பொருட்கள் கடத்திய 7 பேர் கைது.!
puthuchery drugs kidnape seven peoples arrested
புதுச்சேரி மாநிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் சுமார் 600 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் மற்றும் 32 லட்ச ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, அது தொடர்பாக ஐந்து பேரைக் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து மொத்த விற்பனையாளரான தென்றல் நகரைச் சேர்ந்த மணி என்பவரை போலீசார் விசாரணை செய்ததில், அவர் சென்னையைச் சேர்ந்த ஷாஜகான் என்பவரிடம் இருந்து போதை பொருட்களை வாங்கியதாக தெரிய வந்தது.
அதன் பின்னர் தனிப்படை போலீசார், சென்னையில் பதுங்கி இருந்த ஷாஜகானை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது ஷாஜகான் காவல்துறையிடம் ரகசியத் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலில், பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்குக் கொண்டு வரப்படவுள்ள போதை பொருட்கள் சென்னை வந்துள்ளது. அதனை தனது மைத்துனர் மதுராந்தகம் ரவி புதுச்சேரி எடுத்து வர உள்ளார் என்று தெரிவித்தார்.
இந்த தகவலின் படி, போலீசார் ரவியை கைது செய்து, அவர் அளித்த தகவலின்படி சென்னை திருமுடி நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி உட்பட நான்கு வாகனங்களைச் சோதனை செய்தனர். அந்த லாரியில், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து பிடிபட்ட நான்கு வாகனங்கள் உட்பட எட்டு டன் எடை கொண்ட போதை பொருட்கள், 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் எட்டு செல்போன்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி, லாரி ஓட்டுநர்கள் மற்றும் மதுராந்தகம் ரவி உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து, அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது.
English Summary
puthuchery drugs kidnape seven peoples arrested