பஞ்சாப்! முன்னாள் முதல்வர் உட்பட 184 விஐபிகளுக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு ரத்து.! - Seithipunal
Seithipunal


பஞ்சாபில்நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் மாநில தலைவர் ஆன பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். 

இந்நிலையில் பஞ்சாபின் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சன்னி உட்பட 184 முன்னாள் அமைச்சர்கள் , முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் பிற தலைவர்களின் பாதுகாப்பை திரும்பப் பெற பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு முன்னாள் அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ. களுக்கும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை முறையாக ஆய்வு நடத்தப்பட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும், அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலின் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படும் என டிஜிபி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab police withdrawn security cover of minister and MLAs


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->