புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பு விவகாரம்: தனியார் மருத்துவமனைக்கு பறந்த அதிரடி உத்தரவு.!
Puducherry youth death issue ordered close hospital
உடல் பருமன் குறைப்புக்கான அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி, திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஹேமச்சந்திரன் (வயது 26) என்பவர் தனது உடல் எடை குறைக்க தனியார் மருத்துவர் ஒருவரிடம் பெற்றுள்ளார்.
மருத்துவரின் அறிவுரை படி தனியார் மருத்துவமனையில் அவருக்கு கடந்த மாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென ஹேமச்சந்திரன் உயிரிழந்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர்கள், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் முதல் கட்ட அறிக்கை, அறுவை சிகிச்சையில் எந்த தவறும் நிகழவில்லை எனவும் அவசர சிகிச்சைக்கான கருவி இல்லாதது உயிரிழப்புக்கு காரணம் என தகவல் வெளியானது.
இதனால் தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட வேண்டும் என மருத்துவத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார். விசாரணை குழுவின் முழு அறிக்கைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Puducherry youth death issue ordered close hospital