புதுச்சேரி | காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை! அதிர்ச்சியில் கணவர்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 35) இவர் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவரது மனைவி உஷா. இருவரும் 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். அருண்குமாருக்கு கடந்த சில மாதங்களாக சரியாக வேலை இல்லாததால் குடும்பம் நடத்துவதற்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என மனம் வருந்தி வந்தார். 

அருண்குமார் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் கடன் தொல்லை அதிகரித்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

இதனால் அருண்குமாரின் மாமியார் நேற்று அவரது வீட்டிற்கு சென்று இருவரையும் சமாதானம் செய்த நிலையில் நேற்று இரவு உஷா படுக்கையறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருண்குமார் உடனடியாக உஷாவை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து அருண்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry woman committed suicide


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->