சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை: தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, காவல்துறையில் சிம்கா செக்யூரிட்டி பிரிவில் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றியவர் பிரசாந்த் குமார் (வயது 50). 

இவர் புதுச்சேரி மேரி உழவர் கரை பகுதியில் வசித்து வந்தார். இவரது மகளுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதனால் மனவேதனை அடைந்த பிரசாந்த்குமார் நேற்று இரவு மனைவியின் சேலையில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இன்று காலை நீண்ட நேரமாகியும் பிரசாத்குமார் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி  அறையை திறந்து பார்த்தபோது பிரசாத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக கிடந்தார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரசாத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry police sub inspector suicide


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->