கேரளா மாநிலத்தில் பொதுத்தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று கேரளா மாநிலத்தில் நடப்புக் கல்வி ஆண்டுக்கான ( 2022-23 ) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கும் தேதியை கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் 29-ந்தேதி முடிவடைகிறது. 

இந்த பொதுத்தேர்வுக்கான மாதிரித் தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் 3-ந்தேதி முடிவடைகிறது.

இதையடுத்து, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் 3-ந்தேதி தொடங்கும் என்றும் இந்தத் தேர்வு முடிவுகள் மே மாதம் 10-ந்தேதி அறிவிக்கப்படும் என்றும் கேரள பொதுக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

அதேபோல், பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி முடிவடைகிறது. இதற்கான மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் 3-ந்தேதி முடிவடைகிறது. 

இதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு ஜனவரி மாதம் 25-ந்தேதி தொடங்குகிறது. 

இந்தத் தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் 3-ந்தேதி தொடங்கும் என்றும் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் மே மாதம் 25-ந்தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public exam dale allounce in kerala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->