ஆட்டுக்கு பதிலாக மனிதனை பலி கொடுத்த பூசாரி..கைது செய்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வலசபள்ளியில் எல்லையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஜனவரி 16ம் தேதி நடைபெற்ற சங்கராந்தி திருவிழாவின்போது பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடு, கோழி ஆகியவற்றை நரபலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்றது. இந்த நிலையில் சுரேஷ் என்பவர் ஆடு ஒன்றை நேர்த்திக்கடன் செலுத்த வந்துள்ளார். அப்போது அவர் ஆட்டின் தலையை குனிந்தபடியே பிடித்திருந்த போது குடிபோதையில் ஆடுகளை வெட்டி வந்த பூசாரி ஆட்டுக்கு பதிலாக சுரேஷின் கழுத்தை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனால் சுரேஷின் கழுத்து வெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த சுரேஷைமீட்டு ஊர் பொதுமக்கள் மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இறந்துபோன சுரேஷுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்‌. மேலும், சுரேஷின் கழுத்தை வெட்டிய பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priest beheaded the man instead of the goat


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->