"ஆண் குழந்தை மோகம்" கர்ப்பிணி பெண்ணை துடிதுடிக்க கணவர் செய்த கொடூரம்.!
pregnant lady killed by husband and his mother in anthra
ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் பகுதியில் 35 வயதான வேணு என்ற நபருக்கு 25 வயதான சிவரஞ்சனி என்ற பெண்ணுடன் கடந்த 2015ல் திருமணம் நடந்தது. முதன் முதலில் பெண் குழந்தையை சிவரஞ்சனி பெற்றெடுத்தார். ஆனால் வேணுக்கு ஆண் குழந்தை மீதான மோகம் அதிகரித்தது.
எனவே அந்தப் பெண் குழந்தையை சரிவர வளர்க்காமல் வெறுப்புடன் நடத்தி வந்தார். 6 மாதங்களுக்கு முன்பு சிவரஞ்சனி மீண்டும் கர்ப்பம் ஆகினார். வயிற்றில் இருக்கும் குழந்தையை ஆண் குழந்தை என்று வேணுவும் அவருடைய குடும்பத்தினரும் நம்பத் துவங்கினர். அப்பொழுது மருத்துவமனைக்கு சென்று என்ன குழந்தை என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்தனர்.
அவர்களுக்கு பெண் குழந்தை வயிற்றில் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அந்த குழந்தையை அழிக்க வேண்டும் என்று சண்டையிட்டு வந்துள்ளார். கருவை கலைக்க சில மூலிகைகளை அரைத்து கர்ப்பிணி பெண்ணான சிவரஞ்சனிக்கு வேணுவும், அவருடைய தாயும் சேர்ந்து குடிக்க கொடுத்தனர்.
ஆனால் சிவரஞ்சனி அதை குடிக்க மறுத்ததால் வலுக்கட்டாயமாக அந்த மூலிகை சாறு ஊற்றினார்கள். இதனைத் தொடர்ந்து சிவரஞ்சனிக்கு வயிற்று வலி ஏற்பட்டு கதறி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சிவரஞ்சினியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் வேணு மற்றும் அவரது தாய் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து குழந்தையின் பாலினத்தை பிறப்பதற்கு முன்பே அறிவித்த மருத்துவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
pregnant lady killed by husband and his mother in anthra