பாத்ரூமில் வைத்து 15 வயது சிறுமியிடம் அத்துமீறிய பியூன்.. வீடீயோ காலில் ஆபாச மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


மும்பை கிராண்ட் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 35 வயது வாலிபர் பியூனாக வேலை செய்து வருகின்றார். அந்த பள்ளியில் ஒரு 15 வயது மாணவி படித்து வந்த நிலையில், அவருடன் பியூன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார்.

கடந்த ஜூலை மாதத்தில் அந்த மாணவியிடம் கழிவறையில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுதலில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியில் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த சிறுமி தனது தாயிடம் சென்று தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்து அழுகிறார். 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் சென்று புகார் கொடுத்துவிட்டு, போலீஸிடமும் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில், போலீசார் அந்த பியூனை கைது செய்து சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த பியூன் இந்த பெண்ணிடம் மட்டுமல்லாமல் நிறைய மாணவர்களிடம் இப்படி நடந்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு அவருக்கு வீடியோ கால் செய்து நிர்வாணமாக உடலை காட்டச் சொல்லி பியூன் வற்புறுத்திகளார். என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pocso Act on School pyun maharashtra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->