ஊழல் பள்ளியை நடத்தும் பிரதமர்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு.!
PM running corruption school Rahul Gandhi accusation
பிரதமர் நரேந்திர மோடி தான் ஊழல் பள்ளியை நடத்துகிறார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் ஊழல் செய்வது எப்படி என சொல்லிக் கொடுக்கும் பள்ளியை நடத்துகிறார்.
ஒட்டுமொத்த ஊழல் அறிவியல் பாடத்தின் கீழ் ஒவ்வொரு பாடத்தையும் நன்கொடை வணிகம் உள்பட அனைத்தையும் பிரதமர் நரேந்திர மோடி விரிவாக கற்பிக்கிறார் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஊழலின் கூடாரமாக பா.ஜ.க உள்ளது. அதன் தலைவர்களுக்கு இந்த பாடத்தில் கட்டாயமாக்கியிருக்கிறது. அதற்கான கட்டணத்தை இந்த நாடு செலுத்துகிறது.
இந்திய கூட்டணி அரசு மத்தியில் அமைந்ததும் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த பாடத்தை ஒழித்துக் கட்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
PM running corruption school Rahul Gandhi accusation