மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் பிரதமர் மோடி இன்று பரப்புரை.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை ஒட்டி மகராஷ்டிரா, கர்நாடகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இன்று உரையாற்ற உள்ளார். 

கர்நாடகத்தில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி மகாராஷ்டிராத்தின் நான்டெட் மக்களவைத் தொகுதியிலும், பர்பானி மக்களவைத் தொகுதியிலும் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். 

அதே போல் கர்நாடகத்தின் சிக்கபல்லாபூர் மக்களவைத் தொகுதியில் உரையாற்ற உள்ளார். இதனை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா, ராஜஸ்தானில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். 

உத்திரபிரதேசம் மாநிலம், மதுரா மக்களவைத் தொகுதியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi campaign Maharashtra and Karnataka 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->