சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த தடை இல்லை.!! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


பீகாரில் மாநில அளவிலான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு அதில் அனைத்து சாதி, அதன் உபசாதிகள், மதம் போன்ற எல்லா விவரங்களும் இடம்பெற்றிருக்கும் வகையில் சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார்.

அதன்படி பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு இரு கட்டங்களாக 45 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு முதல் கட்ட கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த முதல் கட்ட கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் உள்ள வீடுகளின் எண்ணிக்கை குறித்த விவரம் சேகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த கணக்கெடுப்பில் மக்களின் சாதி, துணை சாதி, மதம், பொருளாதார நிலை ஆகியவை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் மூலம் மொத்தம் 12.7 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்ட திட்டமிடப்பட்டது. இந்த விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படும் என பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அறிவித்தர்.

இந்த நிலையில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிகார அரசு சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஜூலை 3ம் தேதி வரை பாட்னா உயர்நீதிமன்றம் தடை வைத்தது.

இந்தியாவிலேயே முதன் முறையாக முழுமையான சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தும் முதல் மாநிலம் என்ற பெருமை பீகார் பெற்ற இருந்த நிலையில் பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் வழக்கின் மீதான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தடை இல்லை என தீர்ப்பு வழங்கி சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் பாட்னா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் பீகார் மாநிலத்தில் மீண்டும் சாதி வாரிய கணக்கெடுப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக வழக்கறிஞர் டினு குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PatnaHC verdict no ban on conducting caste based census in bihar


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->