நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி.!
NTK leader seeman addmit hospital in coimbatore palladam
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி.!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருமண மோசடி புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் கடந்த 2008-ம் ஆண்டு தங்களுக்கு திருமணம் நடந்தது என்றும், ஆனால் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகார் குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதனால், விஜயலட்சுமி தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில் விஜயலெட்சுமி சமீபத்தில் மீண்டும் சீமான் மீது புகார் கொடுத்தார்.
இந்தப் புகார் தொடர்பாக கோயம்பேடு காவல் மாவட்ட அதிகாரி உமையாள் விஜயலட்சுமியை சென்னை ராமாபுரம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து, அங்கு அவரிடம் விசாரணை நடத்தினார். நேற்று மாலை தொடங்கிய இந்த விசாரணை இரவு வரை நீடித்தது.
இதற்கிடையே சீமான் கோவை மாவட்டம் பல்லடம் அருகே அறிவித்திருந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பல்லடத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்த சீமான், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
NTK leader seeman addmit hospital in coimbatore palladam