நல்ல - கள்ள..! நித்தியின் விளக்கத்தை கண்டு வாயடைத்துப்போன நெட்டிசன்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த நித்யானந்தா பெங்களூரை அடுத்துள்ள பிடதி பகுதியில் நித்தியானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வந்தார். இவரின் சொற்பழிவை கேட்ட கோடான கோடி பக்தர்கள் மற்றும் பக்தைகள் ஆதரவு பெருகவே., இவரின் கிளைகளும் இந்தியா முழுவதும் செயல்பட துவங்கியது.இவருக்கு இந்தியாவில் உள்ள பக்தர்கள் மற்றும் பக்தைகளை போலவே வெளிநாட்டு ஆதரவும் பெருகியது. 

nithyanandha, நித்தியானந்தா, kailaasaa, sri kailaasaa, கைலாசா,

இவரை ஒரு குணசித்திர காமடி நடிகராக இணையத்தளத்தில் உருவாக்கி நெட்டிசன்கள் விளையாடி வந்த நிலையில்., பெரும் அதிர்ச்சியாக குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் எழத்துவங்கியது. இது தொடர்பாக புகார்கள் அடுத்தடுத்து தொடர்ந்து எழவே., காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அனைவருக்கும் டிமிக்கி கொடுத்து அவ்வப்போது இணையத்தளம் மூலமாக சீடர்களிடையே உரையாற்றி வந்த நிலையில்., ஈகுவாடார் நாட்டில் இருக்கும் தீவிற்கு கைலாசா என்று பெயர் வைத்து., அதனை தனி நாடாக அறிவிக்கும் பணியில் தற்போது தீவிர களப்பணியில் வந்தார். 

இது தொடர்பாக பல வீடியோ காட்சிகளும் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில்., ஈகுவடார் நாட்டில் நித்தி இல்லை என்றும்., எங்களது நாட்டின் பெயர் அவதூறாக பரப்பப்பட்டு வருவதாகவும்., அவர் ஹைதி என்ற தீவிற்கு தப்பி சென்றுள்ளார் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியானது. இதனைத்தொடர்ந்து அவ்வப்போது இணையத்தளம் மூலமாக சீடர்களுடன் பேசி வந்த நிலையில்., கடந்த சில நாட்களாக நித்தி பேசும் வீடியோ காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது. மேலும்., காவல் துறையினர் சார்பாகவும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

nithyanandha, நித்தியானந்தா, kailaasaa, sri kailaasaa, கைலாசா,

நாட்டில் பல விதமான பிரச்சனைகள் நடந்து வந்தாலும் தினமும் தனது பக்தர்களுக்கு இணையத்தின் மூலமாக உரையாற்றி வருகிறார். மேலும்., தன்னை பற்றி இணையத்தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் ஏளனம் பேசி வரும் நபர்களுக்கு தக்க பதிலடிகளையும் அடுத்தடுத்த வீடியோ காட்சிகளில் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்., கடந்த 2010 ஆம் வருடத்தில் எவ்விதமான ஆதாரமும் இன்றி தன்னை கர்நாடக அரசு கைது செய்ததாகவும்., பின்னர் சாட்சியை கூவி கூவி அழைத்தனர்.

தனது பேச்சினை கேட்போர் அனைவரும் தூக்கத்தில் இருந்தால் தேநீர் குடித்துவிட்டு வருமாறும்., அரை போதையில் இருக்கும் நபர்கள் தண்ணீரை தெளித்து கொண்டு கேட்குமாறும் கூறிஉணார். இதனைத்தொடர்ந்து கள்ள உறவு குறித்து தனிப்பெரும் விளக்கத்தை அளித்து அனைவரையும் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார். ஒருவர் அளித்த கமெண்டுக்கு நேர்மையாக இருந்தால் அது நல்ல விதமான உறவு என்றும்., கொடுத்த கமென்டிற்கு நேர்மையாக இல்லாத உறவு கள்ள உறவு என்றும் விளக்கம் அளித்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nithyananda speech about post comment members


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->