உ. பியில் சோதனை சாவடியில் இருந்த போலீசாரை துப்பாக்கியல் சுட்ட போதை ஆசாமி.!
near uttar pradesh young man attack police officers in cheking point
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டத்தில் நகட்யா பகுதியில் போலீஸ் சோதனை சாவடி ஒன்று உள்ளது.
இந்த சாவடிக்குள் நேற்று இரவு மதுபோதையில் வந்த ஒரு நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு பணியில் இருந்த காவலரை சுட்டுள்ளார்.
இதனால் காவலர் விஷால் சர்மா படுகாயமடைந்தார்.
அதன் பின்னர் தாக்குதல் நடத்திய அந்த நபர் மற்றொருவரின் உதவியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டர்.
இதைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார்? எதற்காக இந்த துப்பாக்கிசூட்டை நடத்தினார்? என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
near uttar pradesh young man attack police officers in cheking point