சத்தீஸ்கர் : காதலியை கொன்று காட்டில் எரித்த காதலன் கைது - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் வசித்து வருபவர் தனுகுர்ரே என்ற இளம்பெண். இவர் ராய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலைபார்த்து வருகிறார்.

இவரை நவம்பர் 21 ம் தேதி முதல் காணவில்லை. இதனால் பதற்றமடைந்த தனுவின் குடும்பத்தினர் நவம்பர் 22 ஆம் தேதியன்று ராய்பூரில் உள்ள  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தனுகுர்ரே கடந்த மாதம் 21ஆம் தேதி ஒடிசாவைச் சேர்ந்த சச்சின் அகர்வால் என்பவருடன் பலங்கிருக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பலங்கிர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து தனுகுர்ரேவின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தனுவின் பெற்றோர் மகளின் உடலை அடையாளம் காட்டியுள்ளனர். இந்த சம்பவத்தில், முதற்கட்ட விசாரணையில் தனு சுட்டுக்கொல்லப்பட்டு, அவரது உடல் எரிக்கப்பட்டதும் தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சச்சின் அகர்வாலை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சச்சின் அகர்வால் நவம்பர் 19ஆம் தேதி ராய்ப்பூருக்கு வந்து, தனுகுர்ரேவுடன் ஒரு மாலில் சினிமா பார்த்துள்ளனர். 

படம் முடிந்து திரும்பி வரும் போது, பிலாஸ்பூரில் வசிக்கும் ஒரு இளைஞரிடமிருந்து தனுகுர்ரேவின் மொபைலுக்கு அழைப்பு வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சச்சின் அகர்வால் தனுவை கொலை செய்து பலங்கிர் காட்டுபகுதிக்கு கொண்டு சென்று எரித்துள்ளது தெரிய வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near sathiskar boy friend kill girl friend


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->