ராஜஸ்தான் : மருமகனுடன் ஓடிய மாமியார்.! கதறி அழும் கணவன்.!
near rajasthan husband pettition for wife and saon in law rescue
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிரோகி மாவட்டம் சியாகாரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அதில், மூத்த மகள் கிஷ்ணாவை நாராயணன் ஜோகி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இதையடுத்து நாராயணன் ஜோகி, மனைவியுடன், மாமியார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றபோது மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே திடீரென காதல் உண்டாகியுள்ளது.
அந்த காதல் ஒருகட்டத்தில் இருவருமே பிரிந்து வாழ முடியாத நிலைமைக்கு கொண்டு போய்விட்டது. இறுதியில், இருவரும் புத்தாண்டு தினத்தன்று, புது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்காக, வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.
மனைவி மற்றும் மருமகனை காணவில்லை என்பதையறிந்த ரமேஷ் அதிர்ச்சியுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தெரிவித்துள்ளதாவது,
"எனது மகளுக்கு திருமணம் முடிந்த பிறகு, மருமகனுடன் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அதேபோல், டிசம்பர் 30ம் தேதி மகளுடன் தன் மருமகன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.
அப்போது நானும் என் மருமகனும் தண்ணி அடித்தோம். இதில் நான் போதையில் கீழே விழுந்துவிட்டேன். மறுநாள் காலையில் கண்விழித்து பார்த்தபோது, பக்கத்தில் இருந்த என் மனைவியையும் மருமகனையும் காணவில்லை.
என்னுடைய மனைவியை மருமகன் தான் மயக்கிவிட்டார். அவர்தான் என் மனைவியை அழைத்துச் சென்றுள்ளார், என் மனைவியை மீட்டு தாருங்கள்" என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் படி போலீசார் மாமியார் மற்றும் மருமகனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
English Summary
near rajasthan husband pettition for wife and saon in law rescue