புதுச்சேரி அருகே காதலி இறந்த சோகத்தில் காதலன் தற்கொலை.!
near puthuchery young man sucied for girl friend death
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தேங்காய்த்திட்டு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் திருக்குமரன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் மகன் ராதாகிருஷ்ணன்சாய். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பெண்ணின் சகோதரர் தனது தங்கையை கண்டித்து வந்தார். அதே சமயம், ராதாகிருஷ்ணன் சாயிடமும் தனது தங்கையிடம் பழக வேண்டாம் என்று எச்சரித்து வந்துள்ளார்.
அதன்படி, ராதாகிருஷ்ணன் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும், அந்த பெண் தானாக சென்று ராதாகிருஷ்ணன் சாயை அவரது வீட்டில் சந்தித்து பேசி வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் சகோதருக்குத் தெரியவந்ததும் அந்த பெண்ணை அவர் கண்டித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் சோகத்தில் இருந்த அந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் சாய் வீட்டுக்கு சென்று அங்குள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராதாகிருஷ்ணன்சாய் காதலியின் நினைவாகவே இருந்து வந்துள்ளார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ராதாகிருஷ்ணனுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று ராதாகிருஷ்ணன்சாய் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காதலி இறந்த சில நாட்களில் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near puthuchery young man sucied for girl friend death