திருமணம் முடிந்த கையோடு மனைவியை விற்ற கணவர்.!
near odisa husband sale eife in aother person
ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹண்டி மாவட்டம் நார்லா பகுதியை சேர்ந்தவர் கிரா பெருக். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூர்ணிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர் திருமணம் நடைபெற்று முடிந்தவுடன் வேலை தேடி டெல்லி செல்வதாக மனைவியையும் உடன் அழைத்து சென்றுள்ளார். அங்கு கீரா பெருக், பூர்ணிமாவை தான் கட்டிய மனைவி என்று கூட பார்க்காமல் பணத்திற்காக மற்றொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.
அதன் பின்னர் விற்பனை செய்த நபரிடம் இருந்து பெருக் பெரும் தொகையை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இதையடுத்து, பூர்ணிமா கடந்த 5 ஆம் தேதி தனது தந்தை குலமணி போய்க்கு போன் மூலம் நடந்த சம்பவம் குறித்து கண்ணீரோடு தெரிவித்தார். இதையறிந்த பூர்ணிமாவின் தந்தை உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் கீரா பெருக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
near odisa husband sale eife in aother person