அசைவம் சமைக்க மறுத்த மனைவி.! பக்கத்து வீட்டுக்காரருக்கு நேர்ந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரைச் சேர்ந்தவர் பப்பு அகிர்வார். இவரது வீட்டுக்கு அருகே வசித்து வருபவர் பில்லு. இந்நிலையில், பப்புவின் வீட்டில் கடந்த செவ்வாய் கிழமையன்று அசைவம் சமைத்ததனால் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

பொதுவாக, இந்துக்கள் செவ்வாய் கிழமை மங்களகரம் வாய்ந்த நாள் என்பதற்காக அன்றைய தினம் அசைவம் சாப்பிடுவதில்லை. ஆனால், அன்று பப்பு அசைவம் சமைக்க வற்புறுத்தியதால், அவரது மனைவி சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், கணவன் மற்றும் மனைவி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

சற்று நேரத்தில் இந்த வாக்குவாதம் தகராறாக மாறி ஒரே கூச்சலாக இருந்தது. இதைக்கேட்ட அண்டை வீட்டுக்காரரான பில்லு, பப்பு வீட்டுக்கு சென்று இருவருக்கு இடையேயான மோதலை தடுத்து நிறுத்தி விட்டு வீடு திரும்பியுள்ளார். 

அதன்பின்னர், குடும்ப சண்டையை நிறுத்தி விட்ட மகிழ்ச்சியில் பில்லு இருந்த நிலையில், சண்டையால் ஆத்திரத்தில் இருந்த பப்பு, பில்லுவின் வீட்ட்டிற்குச் சென்று அவரை அடித்து உள்ளார். இதில், பில்லு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பப்புவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mathya pradesh wife not cook in nonvedge husband kill neighbour


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->