குடிப்பதற்கு பணம் தர மறுத்த பெண்.!! குத்தி கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்தவர் மஸ்தூத். இவரிடம் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் குடிப்பதற்காக அடிக்கடி பணம் வாங்கி வந்துள்ளார்.

அதன் படி மஸ்தூத்தும், பக்கத்து வீட்டு காரர் தானே திருப்பி கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் பணத்தைக் கொடுத்துள்ளார்.

அதேபோல் அந்த போதை ஆசாமி மஸ்தூத்திடம் மட்டுமல்லாமல், அவருடைய மகனிடமும் அடிக்கடி பணம் வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை, அந்த போதை ஆசாமி மீண்டும் மஸ்தூத் வீட்டிற்கு சென்று பணம் கேட்டுள்ளார். 

அனால் மஸ்தூத் பணம் கொடுப்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால், கோபமடைந்த அந்த நபர், கத்தியை எடுத்து அந்த பெண்ணை பலமுறை குத்தியுள்ளார். 

இதனால், சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra neighbour kill woman for not gave money


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->