பெங்களூரில் பரபரப்பு : மனைவி, மகள்களை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட புற்றுநோயாளி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் வட்டரபாளையா பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரா-விஜயா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், நாகேந்திரா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக, விஜயா மருந்துக்கடை ஒன்றில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், நேற்று விஜயா, தனது மகள்களுடன் வாயில் நுரை தள்ளியபடியும், நாகேந்திரா தனது கையை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படியும் கிடந்துள்ளார்கள்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகேந்திராவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அதன் பின்னர், போலீசார் உயிரிழந்த விஜயா மற்றும் அவரது பிள்ளைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் நாகேந்திரா தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு உணவில் விஷத்தை கலந்து கொடுத்து கொலை செய்ததும், பிறகு அவர் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நாகேந்திராவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near banglore man sucide attempt after wife and daughters kill


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->