பெங்களூர் : கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த ஆண் நண்பர்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லயா ஸ்மிதா மற்றும் பவன் கல்யான். நண்பர்களான இவர்கள் பெங்களூரு புறநகரில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனர். 

இந்நிலையில் பவன் கல்யான், மாணவி ஸ்மிதா படிக்கும் பல்கலைக்கழகத்தில் வைத்து அவரை பலமுறை கத்தியால் குத்தி, தானும் தற்கொலை செய்துகொள்ளும் குறிக்கோளில் தன்னையும் கத்தியால் குத்திகொண்டதனால், இருவரும் மயங்கி கீழே விழுந்துள்ளனர். 

இதைபார்த்த மற்ற மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திற்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே ஸ்மிதா உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதில் பலத்த காயமடைந்த பவன் கல்யான் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலைக்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 

இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை?, எதற்காக பவன் கல்யான், மாணவியை கத்தியால் குத்தி, தானும் தற்கொலை செய்ய முன்றார்? என்று பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கொலைக்கான காரணமோ அல்லது காரணமோ இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த கல்லூரி மாணவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near banglore boy friend kill college student


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->