உணவை சாப்பிட்ட குழந்தைகள், கணவன் அடுத்தடுத்து மயங்கி விழ, தூக்கில் தொங்கிய மனைவி.. அதிர்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் கோராடி நகர் பகுதியை சார்ந்தவர் தீரஜ் (வயது 42). இவர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி சுஷ்மா (வயது 41). இவர் மருத்துவர் ஆவார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், நேற்று இவர்கள் வசித்து வந்த வீட்டில் இருந்த 60 வயது பெண்மணி, வீட்டில் குழந்தைகள் இருக்கும் அறை பூட்டப்பட்டு இருப்பதை கண்டுள்ளார். மேலும், கதவை நீண்டநேரம் தட்டியும் பலன் இல்லை. 

இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், சுஷ்மா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். மேலும், கணவர் மற்றும் 2 குழந்தைகள் பிணமாக கட்டிலில் இருந்துள்ளனர். மேலும், அங்கு ஊசி, சிரிஜ் மற்றும் கடிதம் போன்றவை இருந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagpur Doctor suicide with husband and 2 child


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->