முஸ்லீம் வாலிபரை தாக்கிய மர்ம கும்பல்! கிடைத்த ஆதாரம்! துப்புதுலக்கும் டெல்லி காவல்துறை! - Seithipunal
Seithipunal


புதுடெல்லி, வடக்கே உள்ள தில்ஷத் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் வாஜித். இவர் பழ வியாபாரி. இவரது மகன் முகம்மத் இஸார். இவர் சற்று மனநலம் குன்றியவர். 

முகம்மத் வெளியே சென்ற போது ஒரு கும்பல் காரணம் அறியாமல் அவர் மீது சந்தேகம் பட்டு அவரிடம் கேள்வி கேட்டுள்ளனர். ஆனால் முகம்மத் சரியாக பதிலளிக்க முடியாததால் ஆத்திரமடைந்த அவர்கள் முகம்மத்தை திருடன் என நினைத்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதில் முகம்மத் வலி தாங்க முடியாமல் கத்தி அலறியுள்ளார். இதனை பார்த்த ஒருவர் காயமடைந்த முகம்மத்தை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று முகம்மத்தின் தந்தையிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். 

பின்னர் காயமடைந்த முகம்மத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து முகம்மத்தின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையே முகம்மத் மீது தாக்குதல் நடத்திய வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muslim teenager murder case Delhi Police investigation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->