21வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை: நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 21 வது மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா, மும்பை செவ்ரியில் உள்ள ஒரு குடியிருப்பின் 21 வது மாடியில் இருந்து 32 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் நேற்று மதியம் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதனை பார்த்த கட்டிடத்தின் காவலாளி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த இளைஞரின் அறையில் இருந்த மூன்று நண்பர்களையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai Youth committed suicide Police investigate 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->