கடவுள் ராமரை விட பெரியதாக நினைக்கும் 'காங்கிரஸ்': மோடி கடும் விமர்சனம்.!
Modi criticizes Congress
பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர், சக்தி என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,
பா.ஜ.க தலைமையிலான அரசு மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உங்களுடைய ஆசீர்வாதத்தை பெற நான் இங்கு வந்துள்ளேன்.
மோடியின் ஒவ்வொரு உத்தரவாதத்திற்கும் சத்தீஸ்கர் மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என நினைத்தனர்.
ஆனால் பா.ஜ.க அயோத்தி ராமர் கோவிலை கட்டி முடித்தது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்து காங்கிரஸ் தலைவர்கள் புனிதர்களை அவமதித்தனர்.
ராமரை விட தன்னை பெரியதாக காங்கிரஸ் நினைக்கிறது. ட்ரான் புரட்சி விவசாய துறையில் மாற்றத்தை கொண்டு வரும். ட்ரோன்களை இயக்கும் பயிற்சிகளை பெண்கள் பெறுவார்கள்.
மோடிக்கு யாராலும் தீங்கு விளைவிக்க முடியாது. மோடியின் பாதுகாப்பு கவசமாக லட்சக்கணக்கான தாய்மார்களும் நாட்டு மக்களும் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.