மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த ஜனதா கட்சி தொண்டர்!
Marxist communist leader shot death
கேரளா, ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பள்ளிபாடு நீண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சோமன் (56 வயது) இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகராவார்.
இவரது உறவினர் பிரசாத் (வயது 50) இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜனதா கட்சி தொண்டரான இவர் சோமனின் பக்கத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சோமன் மற்றும் பிரசாத் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் முற்றி மோதலில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த பிரசாத் அவரது வீட்டில் இருந்த ஏர் பிஸ்டலை எடுத்து வந்து சோமனை நோக்கி சுட்டதில் சோமன் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக சோமனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதி சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் இதனால் கோபமடைந்து பிரசாத், சோமனை துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து போலீசார் பிரசாத் மீது கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிரசாத்தை தேடி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Marxist communist leader shot death