மணிப்பூர் | பாதுகாப்பு செக்போஸ்ட்டை சூறையாடிய மர்ம கும்பல்! 1047 பேர் கைது!
Manipur check post mysterious gang robbed
மணிப்பூர்: பிஷ்னுபுர் மாவட்டத்தில் உள்ள இரண்டு பாதுகாப்பு செக்போஸ்ட்டை சூறையாடிய மர்ம கும்பல், ஆயுதங்கள் மற்றும் எரிபொருள்களையும் கொள்ளையடித்துள்ளனர்.
கெய்ரென்பாபி, தங்கலாவை காவல் செக்போஸ்ட்டை பெண்கள் மற்றும் ஆண்கள் உள்பட்ட ஒரு கும்பல், அங்குள்ள ஆயுதங்களை கொள்ளையடித்துள்ளனர். மேலும் காவல் நிலையத்திலும் புகுத்து ஆயுதங்களை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
அவர்களை அங்கிருந்த வீரர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். கவுட்ருக், ஹராயேதெல், சென்ஜம் சிராங் பகுதிகளில் ஆயுதங்களை ஏந்தியவர்களுக்கும். பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தால் வீரர் ஒருவர் உள்பட 2 பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்கு இம்பாலில் உள்ள பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீசார் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிஷ்னுபுர், சுரசந்த்புர் மாவட்ட எல்லையில் கூடியிருந்த 500 முதல் 600 பேரை போலீசார் கண்ணீர் புகை வீசி கலைத்தனர்.
அப்போது 25 பேருக்கு மேலாக லேசான காயம் ஏற்பட்டது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை கும்பல் கூடுவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான நிலை ஏற்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வன்முறையின் காரணமாக மணிப்பூரில் 127 செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1047 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
Manipur check post mysterious gang robbed