நடுவழியில் தீப்பிடித்து எரிந்த பேருந்து - ஒருவர் பலி; 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதீப் நோக்கி பேருந்து ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து இந்தப் பேருந்து மேங்குவங்க மாநிலம் மெதினிபூர் மாவட்டத்தில் பஸ்சிம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றியது. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் பதற்றத்தில் பேருந்தில் இருந்து குதித்தனர். இந்தத் தீ விபத்து குறித்து உடனடியாக காவல் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்தத் தகவலின் படி தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலமணி நேரம் போராடி பேருந்தில் பற்றிய தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 30 க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பேருந்து தீ விபத்து அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died and thirty peoples injured for bus fire accident in west bengal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->