கர்நாடகா: மசாஜ் சென்டரில் 21 வயது இளம்பெண்ணை கற்பழித்த நபர் கைது..!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் மசாஜ் சென்டரில் 21 வயது இளம் பெண்ணை கற்பழித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஜெயநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மசாஜ் சென்டரின் உரிமையாளருக்கு நன்கு பழக்கமான ரவீந்திர ஷெட்டி(42) என்பவர் அடிக்கடி மசாஜ் சென்டர் வந்து சென்றுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று மசாஜ் சென்டரில் இளம்பெண் தனியாக இருந்தபோது வந்த ரவீந்திர செட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

மேலும் இது பற்றி வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து இளம்பெண் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் இது குறித்து ஜெயநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ரவீந்திர ஷெட்டியை கைது செய்து அவரிடம் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested for raping 21 year old girl at massage center in bengalore


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->