14 வயது சிறுவனிடம் தகாத வேலை செய்த ஆசிரியர்.. கேரளாவில் பரபரப்பு.!
Kerala child abused by school teacher
சமீப காலமாகவே குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் மிக அதிகமாக நடந்தேறி வருகிறது. இந்த பாலியல் துன்புறுத்தல்களில் சிறுவர், சிறுமியர் என்ற வித்தியாசம் எதுவும் இருப்பதில்லை.
அத்துடன் குழந்தைகள் படிக்கின்ற பள்ளிகளில் கல்வி கொடுக்கும் ஆசிரியர்களாலேயே இந்த கொடுமை நிகழ்த்தப்படுவது தான் ஜீரணித்துக் கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது. அந்த வரிசையில், தற்போது ஒரு ஆசிரியர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
நீலகிரியை சேர்ந்த இர்ஷாத் அலி என்ற நபர் பாலக்காடு பகுதிக்கு அருகில் திருமிற்றக்கோடு, ஊராட்சியில் இருக்கும் மதரசாவில் ஆசிரியர் வேலை செய்து வருகின்றார். இங்கு 14 வயது சிறுவன் ஒருவன் கல்வி பயின்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இர்ஷாத் அலி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் சிறுவனின் பெற்றோருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இர்ஷாத் அலியை கைது செய்துள்ளனர்.
English Summary
Kerala child abused by school teacher