சுட்டெரிக்கும் வெயில்: 3 மாவட்டங்களுக்கு ''மஞ்சள் எச்சரிக்கை'' விடுத்த வானிலை ஆய்வு மையம்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் 3 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசுகிறது. 

ராஜஸ்தான் உள்ள பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் 33 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி திருவனந்தபுரம், ஆலப்புழா, கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் வருகின்ற மே 9ஆம் தேதி வரை அதிகப்படியான வெப்ப அலை வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிக வெப்பநிலை பாலக்காடு மற்றும் கோழிக்கோட்டில் 39 டிகிரி செல்சியஸ் ஆகவும் திருவனந்தபுரம் ஆலப்புழா எர்ணாகுளம் திருச்சூரில் 38 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலை இன்று முதல் மே 10 ஆம் தேதி வரை நீட்டிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala 3 districts yellow warning


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->