கணவனை கொலை செய்து நாடாகமாடிய மனைவி.. கள்ளக்காதல் ஜோடி கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், பெங்களூரு கோனனகுன்டேவைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 30). இவருடைய மனைவி ஷில்பா (வயது 27). திருமணத்துக்கு முன்பே, ஷில்பாவுக்கும், சந்தோஷ் (வயது 29) என்பவருக்கும் காதல் இருந்துள்ளது.

பெற்றோரின் எதிர்ப்பால், மகேஷை ஷில்பா திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்னும், காதலன் சந்தோஷுடன் ஷில்பா தொடர்பில் இருந்தார்.

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி, காதலன் சந்தோஷ் உதவியுடன் கணவன் மகேஷின் கழுத்தை நெரித்து கொலை செய்த ஷில்பா, அவருடைய உடலை மாண்டியாவுக்கு காரில் கொண்டு சென்றார்.

அங்கு, வலிப்பு நோயால் உயிரிழந்து விட்டதாக, கணவர் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தார். மாமனார், மாமியார் பார்த்தபோது, மகன் கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனையடுத்து மாண்டியா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், மகேஷ் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து, ஷில்பாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், 'எனக்கு கணவனுடன் வாழ விருப்பமில்லை. அதனால், காதலனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு, வலிப்பு நோயால் இறந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, ஷில்பா மற்றும் அவருடைய காதலன் சந்தோஷை போலீசார் நேற்று கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakadhal jodi killed husband


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->