ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. பெண் ஒருவர் பலி.. 12 பேர் படுகாயம்.!
Jharkhand bus Accident women death
கொல்கத்தாவிலிருந்து ராஞ்சிக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியின் புற நகரிலிருந்து இன்று அதிகாலை பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்து அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
மேலும் அதிவேகமாக பிரிந்து சென்றதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 12 பேர் மீட்கப்பட்ட அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Jharkhand bus Accident women death