டெல்லியில் சோகம் - புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து பொக்லைன் ஓட்டுநர் பலி.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் சோகம் - புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து பொக்லைன் ஓட்டுநர் பலி.!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள துவாரகா விரைவுச்சாலையில் சமல்கா என்ற இடத்தில் பாலம் ஒன்றுக் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை, இந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. 

அப்போது அந்த பலத்திற்கு கீழே இளைஞர் ஒருவர் பொக்லைன் வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தார். இந்த பொக்லைன் வாகனத்தின் மீது இடிந்த பாலப்பகுதி, விழுந்ததில், வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. 

அதனால், பொக்லைன் வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரை சேர்ந்த ஷகீல் என்பவர் உடல் நசுங்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலப்பணி மேற்பார்வையாளரையும், மேலாளரையும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jcb driver died in delhi for brodge collapse


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->