சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு நினைவு தினம் இன்று...!
jawaharlal nehru memorial 2022
ஜவகர்லால் நேரு :
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு 1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத்தில் பிறந்தார்.
இவர் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால், இவரது பிறந்த நாளை இந்தியக் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவர் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் (1919), காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் (1920) மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1945) ஆகிய சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார்.
நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரைப் பிரதமராக பணியாற்றினார். இவர் 1951ஆம் ஆண்டு இந்திய திட்டக்குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கினார்.
'இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது" என்பதை நன்கு உணர்ந்து அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்திய நேரு அவர்கள், 1964ஆம் ஆண்டு, மே 27ஆம் தேதி மறைந்தார்.
English Summary
jawaharlal nehru memorial 2022