நாளை விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்.! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து நாளை காலை 9.18 மணி அளவில் எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது.

இந்த ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07, ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. இந்த செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயர புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இஸ்ரோ கடந்த ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி-01 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதனால் தோல்வியடைந்த எஸ்.எஸ்.எல்.வி 1 ரக ராக்கெட்டுக்கு பதிலாக, இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை தற்போது வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO Tomorrow launch SSLV 2 rocket


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->