இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் ஏவும் தேதியில் மாற்றம்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம், தயாரித்துள்ள, இந்திய நாட்டின் முதலாவது தனியார் நிறுவனத்தின் ராக்கெட்டான 'விக்ரம்-எஸ்', இந்த மாதம் 12-ந் தேதியில் இருந்து 16-ந் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. 

இதையடுத்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 'இஸ்ரோ' ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படும் இந்த ராக்கெட், வணிக நோக்கத்தில், செயற்கைகோள்களை ராக்கெட் மூலம் செலுத்த திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ராக்கெட்டில் வாடிக்கையாளர்களின் மூன்று சுமைகள் ஏற்றி அனுப்பப்படுகின்றன. 

தற்போது, மோசமான வானிலை காணப்படுவதால், 'விக்ரம்-எஸ்' ராக்கெட் ஏவுதலை வருகிற 18-ந் தேதி காலை 11.30 மணியளவில் விண்ணில் செலுத்தப்படும் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indias first private company rocket flying date change


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->