லண்டனில் மேற்படிப்பு படிக்க சென்ற இந்திய மாணவி கொலை... பிரேசில் இளைஞர் கைது.!
Indian student killed in London
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மாணவி தேஜஸ்வினி (வயது 27) இவர் மேற்படிப்பு படிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் லண்டன் சென்றிருந்தார். இவர் அங்குள்ள வெம்ப்லியில் உள்ள நீல்ட் கிரசன்ட் பகுதியில் தனது நண்பர்களுடன் அறையில் தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் தேஜஸ்வினி நேற்று காலை அவரது அருகில் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் இவருடன் இருந்த சக தோழிகளும் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இந்திய மாணவி தேஜஸ்வினி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசாரிடம் தேஜஸ்வினியின் உறவினர் ஒருவர் தெரிவிக்கையில் ஒரு வாரத்திற்கு முன்பு பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் புதிதாக குடியேறினார் என்றும் அவர்தான் தேஜஸ் பணியை கொலை செய்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனையடுத்து சந்தேகத்தின் பெயரில் 24 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் அந்த பெண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த இளைஞரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Indian student killed in London