உணவில் உப்பு அதிகம் இருந்ததால் மனைவிக்கு மொட்டையடித்த கணவர்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உணவில் அதிகமாக உப்பு சேர்த்ததால் மனைவிக்கு கணவன் மொட்டை அடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 8ஆம் தேதி பெண் ஒருவர் தனது கணவனுக்காக மதிய உணவு செய்து கொடுத்துள்ளார். உணவில் உப்பு அதிகமான காரணத்தால் கணவன் தன் மனைவியை திட்டியுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்த்தகராறு மோதலாக மாறி மனைவியை கணவன் தாக்கியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல், காவல்துறையிடம் புகார் அளித்து விடுவேன் என்று மனைவியை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் வலுக்கட்டாயமாக தனது மனைவியை பிடித்து தலையில் உள்ள முடியை மொட்டை அடித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினரிடம் புகார் அளிக்குமாறு கூறிய நிலையில், 3 நாட்களுக்கு பிறகு அகமதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband shaved his wife because there was too much salt in the food


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->