ஆண்குழந்தைக்காக கர்ப்பிணி வயிற்றில் கணவர் விபரீதம்.! உயிருக்கு போராடும் மனைவி.!  - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் நெக்பூர் பகுதியில் பன்னலால் என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.  இவர்களுக்கு ஏற்கனவே 5 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் அவருடைய மனைவி 6ஆவது முறையாக கர்ப்பமாகி இருக்கின்றார்.

இந்த முறையாவது தனக்கு ஆண் குழந்தை பிறக்குமா என்று அந்த கணவர் நினைத்துள்ளார். மனைவி கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலேயே வயிற்றின் உள்ளே இருப்பது ஆண் குழந்தையா என்று தெரிந்து கொள்ள கொடூரமான திட்டம் ஒன்றை போட்டுள்ளார்.

அதன்படி குழுந்தையை பார்க்கும் முயற்சியில் அவர் தனது மனைவியின் வயிற்றை கிழித்து பார்த்து இருப்பதாக கூறப்படுகிறது. கூர்மையான ஆயுதத்தால் வயிற்றை கிழித்ததில் 35 வயதான அவருடைய மனைவி கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார். 

இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கர்ப்பிணியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பன்னலால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த அவரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband open his wife stomech to seeing baby


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->